War Criminal M.Karunanidhi

தமிழ் இனப்படுகொலைக் குற்றவாளி கருணாநிதி..

இறுதி யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் பலரும் சிங்கள ராணுவ காடையர்களால் கொல்லப்பட்டது அனைவரும் அறிந்ததே..

அந்த கால கட்டங்களில் கருணாநிதி நடத்திய நாடகங்கள் தான் ஈழத்தமிழர்களை மீளா துயருக்கு தள்ளியது என்றால் அது மிகையல்ல..

எம்.பிக்கள் ராஜினாமாவில் ஆரம்பித்து கண்டன கடிதம்..கண்டன அறிக்கை.. மனித சங்கிலி..அப்படி இப்படி என்று காலத்தைக் கடத்தி ஈழ மக்களை ராஜபக்சேவின் ராணுவம் வன்கொடுமை செய்து கொல்ல துணை நின்றார் என்பது பசுமரத்து ஆணி போல் அனைத்து தமிழர்களின் மனதில் பதிந்த ஒன்று..

கருணாநிதி ஸ்பெக்ட்ரம் பணத்தினை வாங்கி கொண்டு தமிழின படுகொலைகளை அனுமதித்தார் என்று தமிழ் உணர்வாளர்கள் சொல்வது 100% உண்மையாகும்..

இப்படி பலநிகழ்வுகளை அடுக்கி கொண்டே போகலாம்..

இதற்க்கெல்லாம் உச்சமாக நிகழ்ந்தது கருணாநிதி கட்சியில் உள்ள சில காடையர்கள் செய்த செயல்தான்..

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க தமிழ் சகோதரிகள் சிலர் அனுமதி கேட்டபோது அனுமதி தராமல் அலைக்கழித்தார் கருணாநிதி பலதடைகளையும் தாண்டி உண்ணாவிதம் இருந்தவர்களை தயாநிதி மாறனுக்காக மனுதாக்கல் செய்ய சென்ற சில காடையர்கள் கிண்டலும் கேலியும் செய்து அந்த சகோதரிகளை தாக்கவும் முற்பட்டனர்..

இது போன்ற கிழ்தர நிகழ்வுகளை பார்த்து ரசித்துக்கொண்டிருதவர்தான் இந்த கருணாநிதி..

ஈழப் பிரச்சணையில் மக்களை ஏமாற்ற மற்றும் ஒரு திட்டம் தீட்டினார் கருணாநிதி..
அது தான் 3 மணி நேர உண்ணாவிரத திட்டம்..
அந்த திட்டத்தின் படி உண்ணாவிரதத்தினையும் தொடங்கினார்..







மனைவி மக்கள் புடைசூழ டாக்டர்கள் துணையோடும் குடும்ப தொலைக்காட்சிகள் சகிதமும் கடற்காற்றோடு குளிர்சாதனபெட்டியும் காற்றினை வீச உல்லாச உண்ணாவிரதம் தொடங்கியது..

பல தரப்பு தமிழ் உணர்வளர்களும் அந்த காலகட்டத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டினால் கூட கைது செய்வது, சிறைக்கு அனுப்புவது என்று தன் உண்மை முகத்தினையும் காட்டிகொண்டுதான் இருந்தார் கருணாநிதி..

தமிழ் உணர்வாளர்களை அடக்க தேசிய பாதுகாப்பு சட்டத்தினையும் பயன்படுத்தினார்.. இதுவரை பயன்படுத்திக் கொண்டும் உள்ளார்..

உண்ணாவிரதம் இருக்கவும் பல தரப்புகள் அனுமதி கேட்டபோது கருணாநிதியால் அனுமதி மறுக்கப்பட்டது ஆனால் இந்த கருணாநிதி மட்டும் யாரிடம் அனுமதி வாங்கி உண்ணாவிரதம் இருந்தார் என்று தெரியவில்லை..

அன்று 3 மணி நேரத்தில் உண்ணாவிரத்தினை(!!??) முடித்துக்கொண்டு போர் நிறுத்தம் ஏற்ப்பட்டுவிட்டதாக கருணாநிதி பொய் பிரச்சாரம் செய்தார்..

இதை நம்பி மக்களும் தளபதி ரமேஷ், நடேசன், புலிதேவன் உள்ளிட்ட போராளிகளும் இலங்கை படையினரிடம் வெள்ளை கொடியுடன் சரணடைந்தனர்..

ஆனால் சரணடைந்தவர்களை சின்னபின்ன படுத்தி பல சித்திரவதைகளை செய்து சிங்கள ராணுவம் கொன்றது அனைவரும் அறிந்ததே..

அதற்கு ஆதாரமாக சேனல் 4 தொலைக்காட்சி பல விடியோக்களை வெளியிட்டுள்ளது..

அதில் ஒன்றுதான் சரணடைந்த தளபதி ரமேஷிடம் சிங்கள ராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாக பேசும் விடியோ..

மற்றொன்று பத்திரிக்கையாளர் இசை பிரியா அவர்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாத கொடுமைகள் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விடியோ..

படுகொலை செய்யப்பட்ட சகோதரி இசைபிரியா..


இவர்கள் படுகொலை செய்யப்பட கருணாநிதியும் ஒரு காரணம் தான்..

கருணாநிதியின் கரங்களில் இவர்களின் ரத்தம் இருக்கிறது என்றால் அது மிகையல்ல..

மற்றுமொன்று தமிழர்கள் பலர் சுட்டு கொல்லப்படும் விடியோவை பற்றி கருணாநிதி முன்பு கருத்து கூறுகையில் இது பழைய விடியோ போல் தெரிகிறதே என்று ராஜபக்சேவுக்கு ஆதரவாக பேசினார் என்பதையும் யாரும் மறந்து விடவில்லை..

அனைத்தையும் முடித்து விட்டு அவரது மகள் கனிமொழி உள்ளிட்ட திமுக கூட்டணி எம்பிக்களை இலங்ககைக்கு அனுப்பினார் அவர்களும் சென்று ராஜபக்சேவுக்கு சர்டிபிகேட் கொடுத்துவிட்டு அவரிடம் பரிசிலும் வாங்கி வந்தனர்..

ராஜபக்சே,சிங்கள அமைச்சர் ரோகிதா மற்றும் பலரிடமும் பரிசில் பெறும் கனிமொழி..







இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி டக்லஸ் உடன் தேடப்படாத குற்றவாளிகள்..


இனபடுகொலைகளை மறைக்க உதவுவதற்க்காக மேளதாளத்துடன் வரவேற்பு ..


இந்த அளவுக்கு(இன்னும் பல உள்ளன) ராஜபக்சேவுக்கு இனப்படுகளை செய்ய கருணாநிதி வழிவகை செய்து கொடுத்தார் என்றால்,இனப்படுகொலைகளை மறைக்க ராஜபக்சேவுக்கு உதவுகிறார் என்றால் நிச்சயமாக கருணாநிதி மேல் பல சந்தேகங்கள் வருவது நியாயம் தானே...

அதனால் கருணாநிதியும் போர் குற்றவாளிதான்..

கருணாநிதியை போர் குற்றத்திற்க்காக விசாரிக்க ஐ.நா மன்றத்திற்கு இது சம்பந்தமான தகவல்களை அனுப்புவோம்..

1 comment:

  1. இலங்கை விவகாரத்தில் இந்தியா இஸ்ரேலை போல இருக்க வேண்டும்

    ReplyDelete