perasiriyar Suba Veerapandian karunchattai tamilar 2G spectrum scandal





ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா குற்றம் ஏதும் செய்யவில்லை என்று வாதாடும் சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு பாசறை வலைபூவின் பதில்..

சுப.வீரபாண்டியன்: ஆ.ராசாவை இரண்டு விசயத்தில் பிடிக்கும் என ஜெகத் கஸ்பர் கூறிய காரணமே எனக்கும் பிடித்தது.ஏன் நமக்கெல்லாம் பிடித்ததும் கூட. ஆனால் ஆங்கில மீடியாக்களுக்கு அது பிடிக்கவில்லை.

அதிமுக பாசறை: உங்களுக்கு பிடிக்கும் என்று சொல்லுங்கள் அது என்ன நமக்கு என்று சொல்கிறீர்கள்..ஓ நீங்கள் உங்கள் கூடாரத்தை சொல்கிறீர்களா..அப்ப சரி..
ஆங்கில மீடிக்கள் வேஸ்ட் சார் அவர்களுக்கு இந்த ஊழலை எப்படியாவது அம்பலப்படுதிவிட வேண்டும் என்ற தவறான நோக்கம்..அது உங்களுக்கு பிடிக்க வில்லை.. ஆனால் தமிழ் மீடியாக்கள் அப்படியல்ல.. இல்லாவிட்டால் உங்களை போன்றவர்களுக்கெல்லாம் நேரம் ஒதுக்கி காலையிலேயே பேச சொல்வார்களா?..

சுப.வீரபாண்டியன்: ஆ.ராசா தனது சொந்த ஊருக்கு வருவதைக்கூட தப்பிச் செல்கிறார் என ஆங்கில மீடியாக்கள் சித்தரிக்கின்றன.

அதிமுக பாசறை: ஊழல் செய்தது டெல்லியில்.. அங்கு கேள்விகள் கேட்கும் போது பதிலளிக்காமல் அல்லது கிளி பிள்ளைபோல் சொன்னதையே சொல்லிவிட்டு அங்கிருந்து வந்தால் தப்பிவருகிறார் என்று தானே பொருளாகிறது..

சுப.வீரபாண்டியன்: எனக்கு கணக்கும், ஆங்கிலமும் வராத ஒன்று. அப்படி இருந்த எனக்கே ஸ்பெக்ட்ரம் தணிக்கை அதிகாரியின் அறிகையை படித்தபோது புரிந்தது என்றால் ஆங்கில மீடியாக்களுக்கு இது புரியாதா? எனக்கே புரிந்தால் அது உங்களுக்கும் புரிய வேண்டும்.

அதிமுக பாசறை: ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது..இன்னமும் உங்களுக்கு கணக்கும் ஆங்கிலமும் தெரியவில்லை என்பது மட்டும் நன்றாக தெரிகிறது..அதை நன்றாக படிக்க சொல்கிறீர்களே அப்படி படித்தால் மக்களுக்கு ஊழல் தெரிந்து விடாதா?
நீங்கள் ராஜாவுக்கு ஆதரவாக பேசுகிறீர்களா அல்லது எதிராக பேசுகிறீர்களா என்பதே எங்களுக்கு தெரியவில்லை..
சரி, நீங்கள் இருக்கும் ஊடகத்தில் அந்த அறிக்கையை வரி விடாமல் படித்து சொல்லி மக்களிடம் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டியது தானே..
உங்களுக்கு கணக்கு தெரியாது என்பதால் இதை சொல்கிறோம் ரூபாய 1760000000000 என்பது 13எண்களையும் 10 பூஜியங்களையும் கொண்டது..
ஒன்று மட்டும் உங்களுக்கு நன்றாக தெரிகிறது..அது "கொடுத்த காசுக்கு மேல் கூவுவது"..

சுப.வீரபாண்டியன்: இந்த அறிக்கையை பத்திரிக்கையில் படிக்காதீர்கள்.

அதிமுக பாசறை: பின்ன எங்க சார் படிக்கிறது..? நீங்க என்னதான் சொல்லவருகிறீர்கள்..

சுப.வீரபாண்டியன்: ஆ.ராசா பணம் வாங்கினார் என எந்த அறிக்கையிலும் இல்லை. நீதிபதியே சொல்கிறார் ஆ.ராசா நிரபராதி என்று.

அதிமுக பாசறை: எந்த நீதிபதி பாஸ் ராஜாவுக்கு நிரபராதி சர்டிபிகேட் கொடுத்தது..ராத்திரி தொல்லைக்காட்சிகளில் குத்தாட்டங்களுக்கு வருவார்களே அந்த நீதிபதியா..?

சுப.வீரபாண்டியன்: ஆனால் தீர்ப்பு வரும் முன்னே பத்திரிக்கையாளர்கள் ஆ.ராசாவைத் தண்டித்து விட்டனர்.

அதிமுக பாசறை: அப்படியென்றால் ராஜா செய்த தவறுக்கு தண்டனை பெற்று விட்டார் இனி அவரை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்ல வருகிறீர்களா? அப்போ மக்கள் பணம் 176000000000-ஐ காந்தி கணக்கில் சேர்த்து விட்டீர்களா?..


சுப.வீரபாண்டியன்: இத்திட்டத்தின் கொள்கையை வகுத்தவர் யார்? தேசிய தொலைத்தொடர்பு கொள்கை 1994-ம் ஆண்டில் உள்ள குழுவினர் 2G ஸ்பெக்ட்ரமை ஏலத்திற்கு விடுங்கள் என்றனர். 2G என்றால் என்ன? ஓவர் ஓவர் என போலீஸ் அதிகாரிகள் ஒரு முனையில் பேசுவது 1G, இருவர் பேசினால் அது 2G, படம் வந்து விழுந்தால் அது 3G.

அதிமுக பாசறை: பணம் வந்து விழுந்தால் அது 2G ஸ்பெக்ட்ரம்..

சுப.வீரபாண்டியன்: புதிய தேசிய தொலைத் தொடர்புக் கொள்கையின் 4-வது இயலில் 19-ம் பக்கம் உரிமம் வழங்க வழி முறை என்ன? என்றும், 6வது இயலில் இனி ஏலம் விட வேண்டாம், யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு உரிமம் கொடுக்கலாம் என அரசே கொள்கை வகுத்துள்ளது. இக்கொள்கைப்படியே 1999-ல் இருந்து அருண் சோரி, பிரமோத் மகாஜன், தயாநிதி மாறன் இருந்தனர். 2007-ல் ஆ.ராசா மே மாதம் பொறுப்பேற்றார். இதில் ஊழல் என்றால் 1999-லிருந்து பதவி வகித்த அத்தனை அமைச்சர்களிடம் இருந்தும் விசாரணை நடத்த வேண்டும். அதை விடுத்து ஆ.ராசா மீது மட்டும் பழிபோடுவது நியாயமல்ல.

அதிமுக பாசறை: 1999-ல் செல்லையே பார்க்காதவர்களின் எண்ணிக்கை பல கோடிகள்..2007 -ல் கிராமத்தில் மாடு மேய்த்து கொண்டு இருக்கும் என் சகோதரன் கையில் கூட செல் இருந்தது..
எப்படி அதையும் இதையும் ஒப்பிடுகிறீர்கள் என்றே தெரியவில்லை..
சரி உங்கள் வாதத்திற்கே வருகிறோம் 1999 அல்ல அதற்க்கு முன்பு இருந்து கூட விசாரிக்கலாம், நாடளுமன்ற கூட்டு குழு அமைத்து அதையும் விசாரிக்க சொல்வதில் தவறில்லை..
மறுபடியும் ராஜா அவர்களை மாட்டிவிடவே நீங்கள் எத்தனிக்கிறீர்கள்..ராஜாவுக்கு ஆதரவாக பேசுவார் என்று நினைத்தால் எதிராக அல்லவா பேசுகிறார்..

சுப.வீரபாண்டியன்: ஒருவேளை ஆ.ராசா கருப்பாக இருப்பதால் பிடிக்கவில்லையோ..என்னமோ.

அதிமுக பாசறை: மன்னன் எவ்வழியோ அவ்வழியே நீங்களும் பேசி உங்கள் தரத்தினை தாழ்த்திவிட்டீர்கள்..அது இருந்தால் தானே தாழ்வதற்கு என்கிறீர்களா.. அதுவும் சரிதான்..

சுப.வீரபாண்டியன்: இரண்டு வகையான பத்திரிக்கை உண்டு. ஒன்று கட்சி சார்ந்தது. மற்றொன்று சார்பற்றது. ஆனால் நடுநிலையான பத்திரிக்கை என்ற பெயரில் வரும் இப்பத்திரிக்கைகளை நம்பவே கூடாது.

அதிமுக பாசறை: பிறகு எதைத்தான் நம்புவது ? நீங்கள் காலையில் ஒரு தொல்லைக்காட்சியில் ஆற்றும் உரையை மட்டும் கேட்க வேண்டுமோ..?


சுப.வீரபாண்டியன்: சில பத்திரிக்கை எழுதுகிறது ‘ஆ.ராசா தி.மு.க.விற்கு அழிக்க முடியாத கறுப்பு அடையாளத்தை தந்துவிட்டு விலகிவிட்டார்’ என்று. அந்தக் கறுப்பு தந்தை பெரியார் தந்தது என்பதை மறக்காதீர்.

அதிமுக பாசறை: பத்திரிக்கைகள் ஆ.ராசா தி.மு.க.விற்கு அழிக்க முடியாத கறுப்பு அடையாளத்தை தந்ததாகத்தான் சொன்னது..ஆனால் அதை பெரியாருடன் ஒப்பிட்டு பெரியாருக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது நீங்கள்தான்..

சுப.வீரபாண்டியன்: ஸ்பெக்ட்ரம் ராசா என எழுதும் பத்திரிக்கைகள் என்றாவது டான்சி ஜெயலலிதா என எழுதியதுண்டா?

அதிமுக பாசறை: நல்ல கேள்வி, அம்மா அவர்கள் தன் மீதுள்ள பொய் வழக்கை எதிர்கொண்டுள்ளார்கள் சிலர் போல் தன் மீதுள்ள வழக்குகளை தனக்குத்தானே வாபஸ் வாங்கி கொள்ளவில்லை..
சரி உங்கள் வழிக்கு வருகிறேன்..குற்றம் சாட்டப்பட்ட சிலரை "மணல் கொள்ளையர்" கருணாநிதி "ஹார்லிக்ஸ் திருடர்" அழகிரி என்று எழுத நீங்கள் தயாரா?

சுப.வீரபாண்டியன்: விடுதலைச் சிறுத்தைகளே! வாருங்கள்!

அதிமுக பாசறை: அதான் சிறுத்தைகளை சிற்றெரும்பு ஆக்கிவிட்டீர்களே..

சுப.வீரபாண்டியன்: ஆர்.ராசா மீது பட்ட கறை அகலும் வரை போராடுவோம். இவர் மீது சுமத்திய பழி நம்மீது சுமத்திய பழியல்லவா?

அதிமுக பாசறை: அவர் மீது சுமத்திய பழி எப்படி உங்கள் மீது சுமத்திய பழியாகும்.. எது எப்படியோ நாட்டு மக்கள் பணம் 1760000000000 -க்கு என்ன பதில் என்று சொல்லமாட்டீர்கள்..

குறிப்பு : ஈழம் பற்றி முன்பு நீங்கள் பேசி கொண்டிருந்தீர்களே.. பழ.நெடுமாறன் அவர்கள் ஈழத்தில் மக்கள் கொல்லப்பட்டு கொண்டிருக்கையில் இங்கு பணம் எண்ணப்பட்டு கொண்டிருந்ததாக சொன்னாரே அதற்கு உங்களின் பதில் என்ன..?

2 comments:

  1. muttaalthanamaaga irukkirathu... sorry admk... better luck next time...

    ReplyDelete
  2. கேவலமா இருக்கு. இப்படியா பதில் வினை ஆற்றுவது..
    படிப்பறிவில்லாத தற்குறியாளரை விட கேவலமாக பதில்கள்.

    போய் படிங்க பாஸ்

    ReplyDelete