nenjukku neethi M.Karunanidhi and Kalaignar M. Karunanidhi

தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி


கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.

*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை.

இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.

பக்கம் 81,82 ல்..............
*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.

இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்................
* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.

பக்கம் 92,93 ல்..............................
* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.

இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.


இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
49 .additional properties after semmuzi coimbatore farm house
50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks)
extra extra extra extra

இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.

வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்!!!

Ram Jam

3 comments:

  1. எம்ஜியாரும் சிறுவதில் இப்படி தான் சாப்பாட்டுக்கு கஷ்ட்டப்பட்டு தனது வாழ்க்கையை கழித்து வந்தார். சரியான உணவு இல்லாமலும் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமல் அவருடையா முதல் மனைவி மரணம் நடந்தது. இவை எல்லாம் இளம் வயது கால அனுபவங்கள். பொதுவாக இன்றைக்கு பல பணக்காரர்களின் பிந்தைய காலத்தை அதிலும் சினிமா துறை சமந்த பட்ட பல பேர் சாப்பாட்டு வசதி இன்றி தான் வாழ்வை துவங்கியவர்கள். ஆனால் அது போலவே சாகுவரை யாரு இருப்பது இல்லை. அவர்களுக்கு ஒரு காலம் வருகின்ற பொது பல தொழில் செய்து பணம் சேர்த்து உள்ளார்கள். அது அனைத்தும் உழைத்து சமாபாதித்த பணம். ஒரு வேலை அது தவறான வழியில் சேர்த்து இருந்தால் அவர்கள் மீது வழக்கு போட்டு நீருபித்து அதை பறிமுதல் செயல்லாம். இன்று அப்படி ஒரு நிலையை சந்தித்து வருவது சாட்சாத் செல்வி . ஜெயலலிதா என்னும் முன்னால் நடிகை தான்.

    ReplyDelete
  2. அடிப்படையிலேயே குழப்பத்தில் வளர்ந்தவர்கள் அதிமுகவினர். எம்ஜிஆருக்கு மனைவிகள் 4 என்பதை மறந்துடுவிடுவார்கள், கருணாநிதிக்கு 3 மனைவிகள் என்று தூற்றுவார்கள். எம்ஜிஆரும் சோற்றுக்கு கஷ்டப்பட்டவர்தான்.ஆனால் பின்னாளில் இடிச்சபுளி செல்வராஜ் 87ல் அவர் இறக்கும் தருவாயில் பண உதவி கேட்டு வந்தபோது 5 லட்சம் (87ல் 5 லட்சம் என்பது மிகப்பெரிய தொகை)கொடுக்கவும் தயாராக இருந்தார் என்பது வரலாறு. கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் பத்திரத்தில் உள்ளபடி அவ்ர் தான் அரசியல் பதவிக்கு வரும் முன்னரே அவ்வீட்டை வாங்கியிருக்கிறார் என்பது வரலாறு. ஏழை ஒருவன் பணக்காரன் ஆவது ஒன்றும் இந்திய தண்டனைச் சட்டபடி குற்றமில்லையே? அம்பானி கூட பெட்ரோல் பங்கில் வேலை பார்த்ததாகத்தானே சொல்லக்கேட்டிருக்கிறோம். சொல்லப்போனால் இராமாவரம் தோட்டத்தை காட்டிலும் கோபாலபுரம் வீடு சின்னதுதான். அதிமுகவின் உறுதியான, மிக முக்கியமான கொள்கையின்படி அவர்கள் கருணாநிதியை எதிர்ப்பார்கள் அவ்வளவுதான். அதிமுகவை சார்ந்த யாரிடமும் ”ஏன்1 நீங்க அதிமுகவில் உள்ளீர்கள்” என கேட்டாலும் “எனக்கு கருணாநிதி பிடிக்காது அதனாலதான்.” என்று சொல்வார்கள். ஆனால் திமுகவில் இருப்பதற்கு காரண காரியங்கள் நிறைய உண்டு.

    அதிமுகவினரின் கொள்கை உச்சத்தில் இருந்தபோது ஒரு சம்பவம்..... எம்ஜிஆர் இயற்கையாக மரணமடைந்தார் 87ல். அண்ணாசாலையில் திரண்டிருந்த ஊர்வலத்தில் புகாரி எதிரில் உள்ள திராவிடர் கழகத்தால் அமைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் சிலையை சம்பந்தமில்லாமல் வெறுப்பின் உச்சத்தில் இடித்து தள்ளியது அவர்களின் குணாதிசத்துக்கு உதாரணம்.

    முடிந்தால் கருணாநிதியின் மேலும் ஒரு சொத்து குவிப்பு வழக்கை போட்டு அவரை கைது செய்யலாமே? அதை விடுத்து ஒப்பாரி வைப்பது உங்கள் அறிவீனத்தை காட்டுகிறது.

    ReplyDelete