AIADMK candidates list,vetpalar pattiyal


1. மாண்புமிகு அம்மா ஜெயலலிதா - ஸ்ரீரங்கம்
2. கே.ஏ.செங்கோட்டையன் - கோபிசெட்டிபாளையம்
3. ஓ.பன்னீர்செல்வம் - போடிநாயக்கனூர்
4. பா.வளர்மதி - ஆயிரம் விளக்கு
5. டி.ஜெயக்குமார் - ராயபுரம்
6. சைதை துரைசாமி - கொளத்தூர்
7. பழ.கருப்பையா - துறைமுகம்
8. எஸ்.கோகுல இந்திரா - அண்ணா நகர்
9. எஸ்.பி.வேலுமணி - தொண்டாமுத்தூர்
10. ஆர்.சின்னசாமி - சிங்காநல்லூர்
11. எம்.கே.முத்துகருப்பண்ணசாமி - பொள்ளாச்சி
12. ஓ.கே.சின்னரொஜ் - மேட்டுப்பாளையம்
13. செ.தாமோதரன் - கிணத்துக்கடவு
14. வி.சி.ஆறுக்குட்டி - கவுண்டம்பாளையம்
15. சேலஞ்சர் துரை (எ) ஆர்.துரைசாமி - கோயம்புத்தூர் (தெற்கு)
16. தா.மலரவன் - கோயம்புத்தூர் (வடக்கு)
17. சிவசுப்ரமணியன் - நெய்வேலி
18. சொரத்தூர் ரா.ராஜேந்திரன் - குறிஞ்சி்ப்பாடி
19. முருகுமாறன் - காட்டுமன்னார் கோயில் (தனி)
20. எம்.சி.சம்பத் - கடலூர்
21. செல்வி ராமஜெயம் - புவனகிரி
22. பழனியப்பன் - பாப்பிரெட்டிபட்டி
23. கே.பி.அன்பழகன் - பாலக்கோடு
24. சா.பழனிசாமி - வேடசந்தூர்
25. கே.எஸ்.வேணுகோபாலு - பழநி
26. பி.பாலசுப்ரமணி - ஒட்டன்சத்திரம்
27. ரா.விசுவநாதன் - நத்தம்
28. தோப்பு என்.டி.வெங்கடாசலம் - பெருந்துறை
29. எஸ்.எஸ்.ரமணிதரன் - அந்தியூர்
30. ஆர்.என்.கிட்டுசாமி - மொடக்குறிச்சி
31. ரா.துரைக்கண்ணு - பாபநாசம்
32. இந்திரா காந்தி - துறையூர் (தனி)
33. ஆர்.மனோகரன் - திருச்சி (கிழக்கு)
34. என்.மரியம் பிச்சை - திருச்சி (மேற்கு)
35. ஆர்.வைத்திலிங்கம் - ஒரத்தநாடு
36. ராம.ராமநாதன் - கும்பகோணம்
37. பாண்டியராஜன் - திருவிடைமருதூர்
38. ரவி - அரக்கோணம் (தனி)
39. சீனிவாசன் - ஆற்காடு
40. கே.சி.வீரமணி - ஜோலார்பேட்டை
41. எஸ்.ஆர்.கே.அப்பு (எ) ராதாகிருஷ்ணன் - காட்பாடி
42. அ.முகமது ஜான் - ராணிப்பேட்டை
43. ரமேஷ் - திருப்புத்தூர்
44. ப.தன்சிங் - பல்லாவரம்
45. கோவி.சம்பத்குமார் - வாணியம்பாடி
46. டாக்டர் வி.எஸ்.விஜய் - வேலூர்
47. வெற்றிவேல் - டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர்
48. ராஜலட்சுமி - மயிலாப்பூர்
49. வி.பி.கலைராஜன் - தியாகராயநகர்
50. வ.நீலகண்டன் - திரு.வி.க., நகர் (தனி)
51. ஜி.செந்தமிழன் - சைதாப்பேட்டை
52. துரை மணிவேல் - அரியலூர்
53. இளவழகன் - ஜெயங்கொண்டம்
54. ஜெ.சி.டி.பிரபாகரன் - வில்லிவாக்கம்
55. எம்.பி.அசோக் - வேளச்சேரி
56. தங்கதமிழ்ச் செல்வன் - ஆண்டிப்பட்டி
57. எஸ்.கணிதா சம்பத் - மதுராந்தகம் (தனி)
58. வி.சோமசுந்தரம் - காஞ்சிபுரம்
59. வி.எஸ்.ராஜி - செய்யூர் (தனி)
60. பி.வி.ரமணா - திருவள்ளூர்
61. என்.எஸ்.ஏ.ஆர்.மணிமாறன் - பூந்தமல்லி
62. பொன். ராஜா - பொன்னேரி(தனி)
63. வி.மூர்த்தி - மாதவரம்
64. அழகுவேல் பாபு - கள்ளக்குறிச்சி (தனி)
65. கே.பி.நாகராஜன் - மைலம்
66. அப்துல் ரகீம் - ஆவடி
67. பா.மோகன் - சங்கராபுரம்
68. வேதாசலம் - அம்பத்தூர்
69. கே.குப்பன் - திருவொற்றியூர்
70. டாக்டர் த.அரிதாஸ் - திண்டிவனம் (தனி)
71. குமரகுரு - உளுந்தூர்பேட்டை
72. ஜானகிராமன் - வானூர் (தனி)
73. சி.வி.சண்முகம் - விழுப்புரம்
74. ராஜேந்திர பாலாஜி - சிவகாசி
75. ஆர்.பி.உதயகுமார் - சாத்தூர்
76. கோபால்சாமி - ராஜபாளையம்
77. வைகை செல்வன் - அருப்புக்கோட்டை
78. வி.செந்தில்நாதன் - அரவக்குறிச்சி
79. கே.வி.ராமலிங்கம் - ஈரோடு (மேற்கு)
80. பி.ஜி.நாராயணன் - பவானி
81. வாலாஜாபாத் பா.கணேசன் - உத்திரமேரூர்
82. ராமச்சந்திரன் - தாம்பரம்
83. நாஞ்சில் முருகேசன் - நாகர்கோவில்
84. ஜார்ஜ் - கிள்ளியூர்
85. தமிழரசன் - மதுரை கிழக்கு
86. பச்சைமால் - கன்னியாகுமரி
87. லாரன்ஸ் - குளச்சல்
88. ஏ.கே.போஸ் - மதுரை வடக்கு
89. செல்லூர் ராஜூ - மதுரை மேற்கு
90. சாமி - மேலூர்
91. தண்டரை கே.மனோகரன் - திருப்போரூர்
92. எம்.வி.கருப்பையா - சோழவந்தான் (தனி)
93. மெளச்சூர் இரா.பெருமாள் - ஸ்ரீபெரும்புதூர் (தனி)
94. ஏ.பாப்பா சுந்தரம் - குளித்தலை
95. எஸ்.காமராஜ் - கிருஷ்ணராயபுரம்
96. வி.செந்தில் பாலாஜி - கரூர்
97. மா.முத்துராமலிங்கம் - திருமங்கலம்
98. கே.பி.முனுசாமி - கிருஷ்ணகிரி
99. கே.இ.கிருஷ்ணமூர்த்தி - பர்கூர்
100. மனோரஞ்சிதம் நாகராஜ் - ஊத்தங்கரை
101. ஜெயபால் - நாகப்பட்டினம்
102. எஸ்.பவுன்ராஜ் - பூம்புகார்
103. திருமதி. மா.சக்தி - சீர்காழி (தனி)
104. காமராஜ் - வேதாரண்யம்
105. பா.தனபால் - ராசிபுரம் (தனி)
106. பாஸ்கர் - நாமக்கல்
107. பி.தங்கமணி - குமாரபாளையம்
108. புத்தி சந்திரன் - உதகமண்டலம்
109. இளம்பை ரா.தமிழ்ச்செல்வன் - பெரம்பலூர் (தனி)
110. கு.பா.கிருஷ்ணன் - ஆலங்குடி
111. ராஜநாயகம் - அறந்தாங்கி
112. பி.கே.வைரமுத்து - திருமயம்
113. விஜய பாஸ்கர் - விராலிமலை
114. நா.சுப்ரமணியன் - கந்தர்வகோட்டை (தனி)
115. முருகன் - முதுகுளத்தூர்
116. சோழன் சித.பழனிசாமி - காரைக்குடி
117. ஆர்.எஸ்.ராஜ.கண்ணப்பன் - திருப்பத்தூர்
118. ம.குணசேகரன் - மானாமதுரை (தனி)
119. சுந்தர்ராஜ் - பரமக்குடி (தனி)
120. மாதேஸ்வரன் - ஆத்தூர் (சேலம்)
121. பெருமாள் - ஏற்காடு (தனி)
122. பல்பாக்கி சி.கிருஷ்ணன் - ஓமலூர்
123. கே.பழனிச்சாமி - எடப்பாடி
124. விஜயலட்சுமி பழனிச்சாமி - சங்ககிரி
125. ஜி.வெங்கடாசலம் - சேலம் (மேற்கு)
126. என்.கே.செல்வராஜ் - சேலம் (தெற்கு)
127. எஸ்.கே.செல்வம் - வீரபாண்டி
128. சிவா.ராஜமாணிக்கம் - மன்னார்குடி
129. ஆர்.காமராஜ் - நன்னிலம்
130. குடவாசல் எம்.ராஜேந்திரன் - திருவாரூர்
131. கே.பி.கந்தன் - சோழிங்கநல்லூர்
132. செந்தூர் பாண்டியன் - கடையநல்லூர்
133. இசக்கி முத்தையா - அம்பாசமுத்திரம்
134. பி.ராஜேந்திரன் - ஆலங்குளம்
135. துரையப்பா - வாசுதேவநல்லூர்
136. நயினார் நாகேந்திரன் - திருநெல்வேலி
137. சொ.கருப்பசாமி - சஙகரன்கோவி்ல் (தனி)
138. எம்.எஸ்.எம்.ஆனந்தன் - திருப்பூர் - வடக்கு
139. கே.பி.பரமசிவம் - பல்லடம்
140. சி.சண்முகவேலு - மடத்துக்குளம்
141. என.எஸ்.என்.நடராஜ் - காங்கேயம்
142. கே.பொன்னுசாமி - தாராபுரம் (தனி )
143. ஏ.ஏ.கருப்புசாமி - அவினாசி
144. பொள்ளாச்சி வி.ஜெயராமன் - உடுமலைப்பேட்டை
145. ராமச்சந்திரன் - திருவண்ணாமலை
146. ஜெயசுதா லட்சுமி காந்தன் - போளூர்
147. அரங்கநாதன் - கீழ்பெண்ணாத்தூர்
148. அகரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி - கலசபாக்கம்
149. முக்கூர் சுப்ரமணியன் - செய்யாறு
150. குணசீலன் - வந்தவாசி
151. கடம்பூர் ராஜு - கோவில்பட்டி
152. சண்முகநாதன் - ஸ்ரீவைகுண்டம்
153. செல்லபாண்டியன் - தூத்துக்குடி
154. பி.ஆர்.மனேகரன் - திருச்செந்தூர்
155. மார்கண்டேயன் - விளாத்திகுளம்
156. ரத்தினசாமி - திருவையாறு
157. ரெங்கசாமி - தஞ்சாவூர்
158. பூனாட்சி - மண்ணச்சநல்லூர்
159. ஆர்.சந்திரசேகர் - மணப்பாறை
160. என்.ஆர்.சிவபதி - முசிறி

Amma Jayalalitha files nomination from Srirangam



மாண்புமிகு அம்மா அவர்கள் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்கள்

AIADMK Election manifesto 2011,அதிமுக தேர்தல் அறிக்கை 2011




அம்மா அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை முழு விவரம்..

மாணவர்களுக்கு லேப்டாப் : பிளஸ்- 1, பிளஸ் - 2 பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். மேலும் கலை, அறிவியல் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும்.

சாதிச் சான்றிதழ், இதர சான்றிதழ் பள்ளியிலே வழங்கப்படும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடையும், காலணியும் இலவசமாக வழங்கப்படும்.

10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு, தனியார் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை , பள்ளி செல்லும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்.

கேபிள் டி.வி., அரசுடைமையாக்கப்படும். இத்தொழிலில் இருக்கும் ஏகபோகம் தடுக்கப்படும். அனைவருக்கும் இலவச கேபிள் டி.வி., இணைப்பு வழங்கப்படும்.



ரேசன்கார்டு உள்ள அனைவருக்கும் மாதம்தோறும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படும்,

அது இல்லாவிட்டால் இது என்பது போல் இல்லாமல், இல்லத்தரசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் ஆகியன மூன்றும் இலவசமாக வழங்கப்படும். நடமாடும் மருத்துவமனைகள் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும். ஏழை மக்கள் வீடுகட்ட ரூ.1.8 லட்சம் பணம் மானியமாக வழங்கப்படும். மகளிருக்கு பேறுகால உதவித்தொகையாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு ஆறு மாத காலமாக நீட்டிக்கப்படும். 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ். திருமண உதவித் தொகை ரூ. 25,000 வழங்கப்படும். மேலும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும். அனைவருக்கும் 20 லிட்டர் மினரல் வாட்டர் வழங்கப்படும்.

மும்முனை இணைப்பு மின்சாரம் : கிராமம் மற்றும் நகர்புறங்களில் 4 ஆண்டு காலத்தில் மும்முனை மின்சார இணைப்பு தரப்படும். கரும்பு கெ?ள்முதல் விலை டன்னுக்கு ரூ. 2500 ஆக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனமயமாக்கப்படும். நிர்வாகம் சீரணைக்கப்படும். வீடு, தெ?ழில், விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படும். மின்சார திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய மின்சார பாதுகாப்பு படை அமைக்கப்படும்.வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் நபர்களுக்கு 4 ஆடுகளும், முக்கிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 60 ஆயிரம் மாடுகள் வரை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு ஊழியர் நலனுக்கு பாதுகாப்பு : அரசு ஊழியர்கள் நலன்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அனைத்து குறைபாடுகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது தீர்வு காணப்படும்.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்க மீனவர்கள் பாதுகாப்பு படை அமைக்கப்படும் என்றார். மீன்பிடிக்கு தடை விதிக்கப்படும் 45 நாட்களுக்கு மீனவர்களுக்கு உதவித் தொகையாக ரூ. 2000 வழங்கப்படும். பருவகாலத்தில் மீன் பிடிக்கு இடையூறு ஏற்படும் போது ரூ. 4000 உதவித்தொகை வழங்கப்படும்.

தமிழகத்தை தலை நிமிரச் செய்வது லட்சியம் : தமிழகத்தை ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைக்கவும், தமிழர்களின் மொழி, இன கலாச்சார உணர்வுகளை மீட்டெடுத்து, எதற்கும் கை ஏந்தும் நிலையை மாற்றி, தன்மான மிக்க தமிழினத்தை மீண்டும் உருவாக்கும் சுய மரியாதையை மீட்டெடுத்து, எதிர்கால இளைஞர்கள், இளம் பெண்கள் தலை நிமிர்ந்து சொந்தக்காலில் நிற்க, ஏற்ற வழியை உருவாக்கவும்; கல்வி, மருத்துவம், விவசாயம்,நதிநீர், அடிப்படை கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து - இழந்த பெருமையை மீட்டெடுத்து, தமிழகத்தை தலை நிமிரச் செய்வது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் லட்சியம்.



விலைவாசியை குறைக்க சிறப்புத் திட்டம் : விலைவாசி உயர்வினால் இன்றைக்கு அனைத்துத் தரப்பு மக்களும்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதை ஒழுங்கு முறைப்படுத்த வேண்டிய மத்திய மாநில அரசுகளின் செயலற்ற தன்மையால் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.விவசாய உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் பயனில்லாமல், இடையில் உள்ள இடைத்தரகர்களும், பதுக்கல்காரர்களும், மொத்த விற்பனையாளர்கள், ஆன்லைன் வரன்முறையாளர்களினால் திட்டமிட்டு ஏற்றப்படும் விலைவாசியின் ஏற்றம் தடுக்கப்பட்டு, அதைத் தடுக்க அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். விலைவாசி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும்.



விவசாய உற்பத்தி மற்றும் லாபத்தை கணக்கிட்டு அதன் அடிப்படையில் குறைந்த ஆதரவு விலை அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும், கரும்பின் விலையை நிர்ணயிப்பதைப் போல விலை நிர்ணயம் செடீநுயப்படும். கடைகளில் வாங்கி உண்ணும் உணவு பொருட்களுக்கு இடைத்தரகர்கள் நீக்கப்பட்டு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட்டு உபயோகிப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும் பயன் தரக்கூடிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இலவசமாக நவீன பசுமை வீடுகள் : வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் 1,80,000/- ரூபாடீநு செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு இத்திட்டம் 1 லட்சம் ரூபாடீநு மானியத்துடன் விரிவாக்கம் செய்யப்படும். வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்ட 3 சென்டில் இடம் அளிக்கப்படும். கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வாங்கப்பட்ட வீட்டுக் கடன் மற்றும் வட்டிகளால் அல்லலுறும் கடனாளிகளின் பிரச்சனைகள் களையப்படும்.

இருண்ட தமிழகம் ஒளி பெற தடையில்லா மின்சாரம் : இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும். மின்சார வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, மின் விநியோகம் சீராக்கப்பட்டு, மின் திருட்டு தடுக்கப்படும். வீடு, தொழில் மற்றும் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் இதற்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயம், குடும்பம், தொழில்களுக்கான மின்சார விநியோகம் தனியாக பிரிக்கப்பட்டு, அதை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விநியோக முறையில் மாற்றம் செய்து சீரமைப்போம்.

கம்ப்யூட்டர் முறையில் மின்சார மீட்டர் அளவு கணக்கிடப்படும். மேலும் அரசு துறைகளிலும், தனியார்துறைகளிலும் மின்சாரம் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டு மின்சாரம் சேமிக்கப்படும். அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சார இணைப்பு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்படும். மின்சார திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சார பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.

இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்போம்..





இருண்ட தமிழகத்தில் மீண்டும் ஒளிவிளக்கேற்ற இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்போம்..

vote for AIADMK for a better tommorrow



இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்போம்..