Amma jayalalitha and ultimate star ajith kumar



அம்மா அவர்களுடன் அல்டிமேட் ஸ்டார் அஜித்..

Jayankondan MLA Rajendran,Culprit Deal,horse-trading



ஸ்பெக்ட்ரம் பணத்தில் பிற கட்சி MLA-க்களை விலைக்கு வாங்குவது எளிது..
ஆனால் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும்..
அம்மாவின் பெயரை சொல்லி ஜெயம்கொண்டம் தொகுதியில் ஓட்டு வாங்கி வெற்றி பெற்றுவிட்டு அயலாரிடம் பணத்திற்கு சோரம் போன ராசேந்திரன்..
விலை போனவர்களும் அவர்களை வாங்கியவர்களும் பதில் சொல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை..

tamil oodaga peravai arul thanthai jagath gaspar raj 2G spectrum scandal





பாதிரிக்கு பதில்கள்:

தமிழ் ஊடக பேரவை என்ற பெயரில் ஸ்பெக்ட்ரம் ராஜா மீதான ஊழல் குற்றசாட்டை எதிர்த்து பேசிய பாதிரிக்கான பாசறை வலைபூவின் பதில்கள் இதோ..

அருட்தந்தை ஜெகத் கஸ்பர் : "நான் சிறுவயதில் இருக்கும்போது என் தமிழாசிரியர் எனக்கொரு கதை சொன்னார் “ஞானப் பழத்தைப் பெற முருகனுக்கும், பிள்ளையாருக்கும் போட்டி நடந்தது. முருகன் உலகைச் சுற்றக் கிளம்பினான். பிள்ளையாரோ தாய், தந்தையே உலகமென சுற்றி வந்து பழம் பெற்றுக் கொண்டான்” எனக் கூறிவிட்டு சொன்னார், “நமக்கு கிடைக்க வேண்டியதைத் தேடி ஊர் உலகத்தைச் சுற்றினால் கிடைக்காது, சுற்ற வேண்டியவர்களைச் சுற்றினால்தான் கிடைக்கும்” என்றார்."

அதிமுக பாசறை : மிக சரியாக சொன்னிர்கள் பாதிரி இந்த டெக்னிக் உங்களுக்குத்தான் கை வந்த கலை ஆயிற்றே.. இல்லாவிட்டால் 4 வருடங்களுக்கு முன்பு தமிழ் மக்களுக்கு யாரென்றே தெரியாமல் இருந்த நீங்கள் இந்த அளவுக்கு வளரமுடியுமா?
நீங்கள் யாரை சுற்றினீர்கள் என்பது தான் உலகம் அறிந்த உண்மை ஆயிற்றே..

அருட்தந்தை ஜெகத் கஸ்பர்: அதுபோல ஆங்கிலச் சேனல்கள் அனைத்தும் அமைச்சர் ஆ.ராசா அவர்களைச் சுற்றி வளைத்து குற்றவாளியாகச் சித்தரிக்கிறது. நாங்கள் இதுபோன்ற விழாவிற்கு வந்து இப்படிப் பேசுவதால் எங்களுக்கும் இதில் பேரம் பேசப்பட்டிருக்கும் என நினைக்கக்கூடத் தோன்றும்.

அதிமுக பாசறை: உங்கள் உள் மனதில் இருப்பது மக்களுக்கும் தோன்றத்தானே செய்யும்..

அருட்தந்தை ஜெகத் கஸ்பர்: ஆ.ராசாவை இரண்டு விசயங்களில் எனக்குப் பிடிக்கும்.

அதிமுக பாசறை: என்னவென்று எங்களுக்கு தெரியும்..

அருட்தந்தை ஜெகத் கஸ்பர்: ஒன்று சமூக நீதி அரசியலை பெரியாரின் தொண்டனாக இருந்து ஆழமாக நேசிப்பதும், மற்றொன்று தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தன்னாலும் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்ற அவரது மனநிலை.

அதிமுக பாசறை: நல்லவேலை பெரியார் உயிருடன் இல்லை,என்ன பாதிரி சொல்கிறீர்கள்.. தி நியுயார்க் டைம்ஸில் அவர் பெயர் ஊழலுக்காக வந்ததை உயர்ந்த நிலை என்று நீங்கள் கருதுகிறீர்களா? தாழ்த்தப்பட்ட சமுகத்தை இதில் இழுத்து அந்த சமுகத்தை கலங்கப்படுத்தாதீர்கள்..

அருட்தந்தை ஜெகத் கஸ்பர்:கடந்த 2003 முதல் 2010 வரையில் ஸ்பெக்ட்ரமின் தணிக்கை அறிக்கை அலசி ஆராயப்பட்டது. 2008-ல் நடந்த 2G-ஸ்பெக்ட்ரம் அறிக்கையான இதில் மட்டும் ஏன் குடைகிறார்கள் என்றால் இந்த ஆடிட்டருக்கு இதில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதைத்தானே காட்டுகிறது.

அதிமுக பாசறை: நிச்சயமாக ஆடிட்டருக்கு உள்நோக்கம் உண்டு. ஆம், அது என்னவென்றால் ஊழல் செய்யப்பட்ட 176000000000 ரூபாய் மக்கள் பணத்தை திருடர்களிடமிருந்து அரசுக்கு திரும்ப பெற்றுத்தரவேண்டும் என்ற உள்நோக்கம் தான்..உங்கள் உள்நோக்கங்களையும் நாங்கள் அறிவோம்..

அருட்தந்தை ஜெகத் கஸ்பர்: ஒரு மனிதன் குற்றவாளி என்றால் முதலில் குற்ற அறிக்கை பதிவு செய்து சி.பி.ஐ. - யிடம் ஒப்படைக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணை முடிந்த பிறகுதான் குற்றவாளி என அறிவிக்க வேண்டும்.

அதிமுக பாசறை: பாதிரி மேல் மட்டங்களிலேயே இருந்து பழகிவிட்டதால் மக்கள் மத்தியில் நடக்கும் நிகழ்வுகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அரசியல் பின்புலம் இல்லாத சாதரண மக்கள் 1000, 2000 திருடிவிட்டதாக குற்றம் சாட்டினால் கூட அவர்கள் மீது காவல் துறையின் எடுக்கும் நடவடிக்கைகள் அவர்கள் நடத்தப்படும் முறை என்ன என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும்..

அருட்தந்தை ஜெகத் கஸ்பர்: எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யாத நிலையில் டிஸ்கவரி சேனலில் செந்நாய்கள் மானைக் கடித்துக் குதறுவது போல் ஆ.ராசா விசயத்தில் நடப்பது நியாயமில்லாத, தர்மமில்லாத ஒன்றாகும்.

அதிமுக பாசறை: அவர் துறையில் ஊழல் என்றால் அவர் அதான் அதற்கு பொருப்பு, அவரை குற்றம் சாட்டாமல் வாயுபகவானையா குற்றம்சாட்டமுடியும்..

அருட்தந்தை ஜெகத் கஸ்பர்: நம் இந்தியாவில் இரண்டு மாயைகளை உடைக்க வேண்டும். ஒன்று நீதி அமைப்பை எவனும் கேள்வி கேட்கக் கூடாது. இரண்டாவது ஊடகம் எது சொன்னாலும் கேள்வி கேட்கக் கூடாது என்பதே.

அதிமுக பாசறை: ஆம் ஏதோ கொஞ்சம் நெஞ்சம் இருப்பதை காப்பது நீதி மன்றம் தானே அதையும் உடைத்துவிட்டல் எளிதில் நாட்டை மொத்தமாக சுரண்டி விடலாம்..ஆமாம் இது நீதி மன்ற அவமதிப்பு இல்லையா..
கரக்ட்டா சொன்னிங்க தமிழ்நாட்டு ஊடகங்கள் சொல்வதை கேட்க்கவே கூடாது..

அருட்தந்தை ஜெகத் கஸ்பர்: இந்த ஆங்கில மீடியாக்கள் உள்ளுக்குள் பல அசிங்கமான ஊழல்களையும், அரைகுறை உண்மைகளையும் வைத்துக்கொண்டு நிஜங்களை மறைத்து செயல்படுகின்றன. ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்காக இன்று ஆடுகின்றன. இந்த மீடியாக்களைக் கேட்கிறேன் நீங்கள் ஒழுக்கமானவர்கள் என்றால் மற்றவர்களைப் பற்றி தீர்ப்பு எழுதுங்கள். ஆனால் நீங்களே ஒழுக்கம் இல்லாதபோது மற்றவரைக் குறை சொல்வதேன்.

அதிமுக பாசறை: உங்கள் கையிலும்தான் மீடியாக்கள் உண்டே ஆங்கில மீடியக்கள் மீதான அந்த அசிங்கமான ஊழல்களை மக்கள் மத்தியில் எடுத்து வைக்க வேண்டியது தானே..அசிங்கமானவர்களுக்கு அசிங்கமான ஊழல்கள் தெரிந்தாலும் தெரிய வாய்ப்பு உள்ளது..

அருட்தந்தை ஜெகத் கஸ்பர்: 2G அலைக்கற்றையால் வரும் வருமானத்தைக் கொண்டு நாட்டு வளர்ச்சிக்கு அளிக்க வேண்டும் என உடன்பாடு உள்ளது.

அதிமுக பாசறை: உங்களின் நாடு எது என்பது அனைவரும் அறிந்ததே..உங்களின் நாடு சிலரின் வீடு என்பதும் எங்களுக்கு தெரியும்..

அருட்தந்தை ஜெகத் கஸ்பர்: 2011-ம் ஆண்டுக்குள் 60 கோடி மக்களுக்கு தொலைபேசி இணைப்புப் பெற வேண்டும். ஆ.ராசா பதவிக்கு வந்த பின் 71 கோடியாக இணைப்புகள் பெருகியுள்ளன.

அதிமுக பாசறை: அது தொழிற்நுட்பத்தினால் ஏற்பட்ட வளர்ச்சி என்பது என்பது கூட தெரியாத தற்குறியா இருக்கிறீர்களே பாதிரி..

அருட்தந்தை ஜெகத் கஸ்பர்: திட்டக்குழுவின் கொள்கைப்படி நடக்கும் ஆ.ராசாவைக் குற்றம் சாட்டுவது சரியான முறையல்ல. இந்த ஊடகத்திற்குள் ஜாதி, மத அரசியல், பண அரசியல் இருக்கிறது. நேர்மையான ஊடகமாக இவர்கள் இருப்பதில்லை. திட்டக்குழுவின் கொள்கைப்படி நேர்மையான வழியில் நடந்த ராசா அவர்கள் கூட்டுக்கொள்ளைக் கூட்டத்தை உடைத்த காரணத்திற்காக சிதைக்கப்படுகிறார்.

அதிமுக பாசறை: திட்டமிட்டு ஊழல் செய்ததாகத்தானே ஊடகங்கள் சொல்கின்றன அதைத்தானே நீங்களும் சொல்கிறீர்கள், அந்த திட்டமிட்ட குழுக்கள் யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்..

நாம் அறிந்தவரையில் "பாதிரி" என்பது மதிப்பு மிக்க பெயர் ஆனால் இவரின் நடவடிக்கைகள் இவரை "போலி பாதிரியோ" என சந்தேகப்பட வைக்கின்றன..

Arignar Anna and Puratchi Thalaivar MGR


அறிஞர் அண்ணா அவர்களுடன் புரட்சிதலைவர் பொன்மனசெம்மல் எம்ஜிஆர்

perasiriyar Suba Veerapandian karunchattai tamilar 2G spectrum scandal





ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா குற்றம் ஏதும் செய்யவில்லை என்று வாதாடும் சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு பாசறை வலைபூவின் பதில்..

சுப.வீரபாண்டியன்: ஆ.ராசாவை இரண்டு விசயத்தில் பிடிக்கும் என ஜெகத் கஸ்பர் கூறிய காரணமே எனக்கும் பிடித்தது.ஏன் நமக்கெல்லாம் பிடித்ததும் கூட. ஆனால் ஆங்கில மீடியாக்களுக்கு அது பிடிக்கவில்லை.

அதிமுக பாசறை: உங்களுக்கு பிடிக்கும் என்று சொல்லுங்கள் அது என்ன நமக்கு என்று சொல்கிறீர்கள்..ஓ நீங்கள் உங்கள் கூடாரத்தை சொல்கிறீர்களா..அப்ப சரி..
ஆங்கில மீடிக்கள் வேஸ்ட் சார் அவர்களுக்கு இந்த ஊழலை எப்படியாவது அம்பலப்படுதிவிட வேண்டும் என்ற தவறான நோக்கம்..அது உங்களுக்கு பிடிக்க வில்லை.. ஆனால் தமிழ் மீடியாக்கள் அப்படியல்ல.. இல்லாவிட்டால் உங்களை போன்றவர்களுக்கெல்லாம் நேரம் ஒதுக்கி காலையிலேயே பேச சொல்வார்களா?..

சுப.வீரபாண்டியன்: ஆ.ராசா தனது சொந்த ஊருக்கு வருவதைக்கூட தப்பிச் செல்கிறார் என ஆங்கில மீடியாக்கள் சித்தரிக்கின்றன.

அதிமுக பாசறை: ஊழல் செய்தது டெல்லியில்.. அங்கு கேள்விகள் கேட்கும் போது பதிலளிக்காமல் அல்லது கிளி பிள்ளைபோல் சொன்னதையே சொல்லிவிட்டு அங்கிருந்து வந்தால் தப்பிவருகிறார் என்று தானே பொருளாகிறது..

சுப.வீரபாண்டியன்: எனக்கு கணக்கும், ஆங்கிலமும் வராத ஒன்று. அப்படி இருந்த எனக்கே ஸ்பெக்ட்ரம் தணிக்கை அதிகாரியின் அறிகையை படித்தபோது புரிந்தது என்றால் ஆங்கில மீடியாக்களுக்கு இது புரியாதா? எனக்கே புரிந்தால் அது உங்களுக்கும் புரிய வேண்டும்.

அதிமுக பாசறை: ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது..இன்னமும் உங்களுக்கு கணக்கும் ஆங்கிலமும் தெரியவில்லை என்பது மட்டும் நன்றாக தெரிகிறது..அதை நன்றாக படிக்க சொல்கிறீர்களே அப்படி படித்தால் மக்களுக்கு ஊழல் தெரிந்து விடாதா?
நீங்கள் ராஜாவுக்கு ஆதரவாக பேசுகிறீர்களா அல்லது எதிராக பேசுகிறீர்களா என்பதே எங்களுக்கு தெரியவில்லை..
சரி, நீங்கள் இருக்கும் ஊடகத்தில் அந்த அறிக்கையை வரி விடாமல் படித்து சொல்லி மக்களிடம் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டியது தானே..
உங்களுக்கு கணக்கு தெரியாது என்பதால் இதை சொல்கிறோம் ரூபாய 1760000000000 என்பது 13எண்களையும் 10 பூஜியங்களையும் கொண்டது..
ஒன்று மட்டும் உங்களுக்கு நன்றாக தெரிகிறது..அது "கொடுத்த காசுக்கு மேல் கூவுவது"..

சுப.வீரபாண்டியன்: இந்த அறிக்கையை பத்திரிக்கையில் படிக்காதீர்கள்.

அதிமுக பாசறை: பின்ன எங்க சார் படிக்கிறது..? நீங்க என்னதான் சொல்லவருகிறீர்கள்..

சுப.வீரபாண்டியன்: ஆ.ராசா பணம் வாங்கினார் என எந்த அறிக்கையிலும் இல்லை. நீதிபதியே சொல்கிறார் ஆ.ராசா நிரபராதி என்று.

அதிமுக பாசறை: எந்த நீதிபதி பாஸ் ராஜாவுக்கு நிரபராதி சர்டிபிகேட் கொடுத்தது..ராத்திரி தொல்லைக்காட்சிகளில் குத்தாட்டங்களுக்கு வருவார்களே அந்த நீதிபதியா..?

சுப.வீரபாண்டியன்: ஆனால் தீர்ப்பு வரும் முன்னே பத்திரிக்கையாளர்கள் ஆ.ராசாவைத் தண்டித்து விட்டனர்.

அதிமுக பாசறை: அப்படியென்றால் ராஜா செய்த தவறுக்கு தண்டனை பெற்று விட்டார் இனி அவரை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்ல வருகிறீர்களா? அப்போ மக்கள் பணம் 176000000000-ஐ காந்தி கணக்கில் சேர்த்து விட்டீர்களா?..


சுப.வீரபாண்டியன்: இத்திட்டத்தின் கொள்கையை வகுத்தவர் யார்? தேசிய தொலைத்தொடர்பு கொள்கை 1994-ம் ஆண்டில் உள்ள குழுவினர் 2G ஸ்பெக்ட்ரமை ஏலத்திற்கு விடுங்கள் என்றனர். 2G என்றால் என்ன? ஓவர் ஓவர் என போலீஸ் அதிகாரிகள் ஒரு முனையில் பேசுவது 1G, இருவர் பேசினால் அது 2G, படம் வந்து விழுந்தால் அது 3G.

அதிமுக பாசறை: பணம் வந்து விழுந்தால் அது 2G ஸ்பெக்ட்ரம்..

சுப.வீரபாண்டியன்: புதிய தேசிய தொலைத் தொடர்புக் கொள்கையின் 4-வது இயலில் 19-ம் பக்கம் உரிமம் வழங்க வழி முறை என்ன? என்றும், 6வது இயலில் இனி ஏலம் விட வேண்டாம், யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு உரிமம் கொடுக்கலாம் என அரசே கொள்கை வகுத்துள்ளது. இக்கொள்கைப்படியே 1999-ல் இருந்து அருண் சோரி, பிரமோத் மகாஜன், தயாநிதி மாறன் இருந்தனர். 2007-ல் ஆ.ராசா மே மாதம் பொறுப்பேற்றார். இதில் ஊழல் என்றால் 1999-லிருந்து பதவி வகித்த அத்தனை அமைச்சர்களிடம் இருந்தும் விசாரணை நடத்த வேண்டும். அதை விடுத்து ஆ.ராசா மீது மட்டும் பழிபோடுவது நியாயமல்ல.

அதிமுக பாசறை: 1999-ல் செல்லையே பார்க்காதவர்களின் எண்ணிக்கை பல கோடிகள்..2007 -ல் கிராமத்தில் மாடு மேய்த்து கொண்டு இருக்கும் என் சகோதரன் கையில் கூட செல் இருந்தது..
எப்படி அதையும் இதையும் ஒப்பிடுகிறீர்கள் என்றே தெரியவில்லை..
சரி உங்கள் வாதத்திற்கே வருகிறோம் 1999 அல்ல அதற்க்கு முன்பு இருந்து கூட விசாரிக்கலாம், நாடளுமன்ற கூட்டு குழு அமைத்து அதையும் விசாரிக்க சொல்வதில் தவறில்லை..
மறுபடியும் ராஜா அவர்களை மாட்டிவிடவே நீங்கள் எத்தனிக்கிறீர்கள்..ராஜாவுக்கு ஆதரவாக பேசுவார் என்று நினைத்தால் எதிராக அல்லவா பேசுகிறார்..

சுப.வீரபாண்டியன்: ஒருவேளை ஆ.ராசா கருப்பாக இருப்பதால் பிடிக்கவில்லையோ..என்னமோ.

அதிமுக பாசறை: மன்னன் எவ்வழியோ அவ்வழியே நீங்களும் பேசி உங்கள் தரத்தினை தாழ்த்திவிட்டீர்கள்..அது இருந்தால் தானே தாழ்வதற்கு என்கிறீர்களா.. அதுவும் சரிதான்..

சுப.வீரபாண்டியன்: இரண்டு வகையான பத்திரிக்கை உண்டு. ஒன்று கட்சி சார்ந்தது. மற்றொன்று சார்பற்றது. ஆனால் நடுநிலையான பத்திரிக்கை என்ற பெயரில் வரும் இப்பத்திரிக்கைகளை நம்பவே கூடாது.

அதிமுக பாசறை: பிறகு எதைத்தான் நம்புவது ? நீங்கள் காலையில் ஒரு தொல்லைக்காட்சியில் ஆற்றும் உரையை மட்டும் கேட்க வேண்டுமோ..?


சுப.வீரபாண்டியன்: சில பத்திரிக்கை எழுதுகிறது ‘ஆ.ராசா தி.மு.க.விற்கு அழிக்க முடியாத கறுப்பு அடையாளத்தை தந்துவிட்டு விலகிவிட்டார்’ என்று. அந்தக் கறுப்பு தந்தை பெரியார் தந்தது என்பதை மறக்காதீர்.

அதிமுக பாசறை: பத்திரிக்கைகள் ஆ.ராசா தி.மு.க.விற்கு அழிக்க முடியாத கறுப்பு அடையாளத்தை தந்ததாகத்தான் சொன்னது..ஆனால் அதை பெரியாருடன் ஒப்பிட்டு பெரியாருக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது நீங்கள்தான்..

சுப.வீரபாண்டியன்: ஸ்பெக்ட்ரம் ராசா என எழுதும் பத்திரிக்கைகள் என்றாவது டான்சி ஜெயலலிதா என எழுதியதுண்டா?

அதிமுக பாசறை: நல்ல கேள்வி, அம்மா அவர்கள் தன் மீதுள்ள பொய் வழக்கை எதிர்கொண்டுள்ளார்கள் சிலர் போல் தன் மீதுள்ள வழக்குகளை தனக்குத்தானே வாபஸ் வாங்கி கொள்ளவில்லை..
சரி உங்கள் வழிக்கு வருகிறேன்..குற்றம் சாட்டப்பட்ட சிலரை "மணல் கொள்ளையர்" கருணாநிதி "ஹார்லிக்ஸ் திருடர்" அழகிரி என்று எழுத நீங்கள் தயாரா?

சுப.வீரபாண்டியன்: விடுதலைச் சிறுத்தைகளே! வாருங்கள்!

அதிமுக பாசறை: அதான் சிறுத்தைகளை சிற்றெரும்பு ஆக்கிவிட்டீர்களே..

சுப.வீரபாண்டியன்: ஆர்.ராசா மீது பட்ட கறை அகலும் வரை போராடுவோம். இவர் மீது சுமத்திய பழி நம்மீது சுமத்திய பழியல்லவா?

அதிமுக பாசறை: அவர் மீது சுமத்திய பழி எப்படி உங்கள் மீது சுமத்திய பழியாகும்.. எது எப்படியோ நாட்டு மக்கள் பணம் 1760000000000 -க்கு என்ன பதில் என்று சொல்லமாட்டீர்கள்..

குறிப்பு : ஈழம் பற்றி முன்பு நீங்கள் பேசி கொண்டிருந்தீர்களே.. பழ.நெடுமாறன் அவர்கள் ஈழத்தில் மக்கள் கொல்லப்பட்டு கொண்டிருக்கையில் இங்கு பணம் எண்ணப்பட்டு கொண்டிருந்ததாக சொன்னாரே அதற்கு உங்களின் பதில் என்ன..?

2g spectrum scandal shares analysis,according to CAG Reports and Sami statements..





இந்த வார ஆனந்த விகடன் தலைப்பு . ராசாவுக்கு பத்து ,கருணாநிதிக்கு முப்பது , சோனியாவிற்கு அறுபது.

அது எது ?

அதிமுக பாசறை வலைப்பூவுக்கு தெரிந்த சில பதில்கள் ..

ஸ்பெக்ட்ரம் ஊழலில்

ராஜாவினபங்கு -- 1760000000000-ல் 10% = 176000000000

கருணாவின் பங்கு- 1760000000000-ல் 30% = 528000000000

சோனியாவின் பங்கு - 1760000000000-ல் 60% =1056000000000

176000000000+528000000000+1056000000000 = 1760000000000 கணக்கு கரைக்டா வருதே நல்ல கணிச்சித்தானே சொல்லியிருக்காய்ங்க..

சு சாமி கணக்குப்படிப் பார்த்தால்..

சோனியாவின் சகோதரிகளுக்கு கிடைத்திருக்கும் பணத்தின் விபரம்..

அனுக்ஷாவிற்கு- 180000000000
ராடியாவிற்கு- 180000000000

180000000000 என்பது 1760000000000 -ல் 10.2272 % ஆகும்..

180000000000+180000000000 = 360000000000

360000000000 என்பது 1760000000000 -ல் 20.45 % ஆகும்..

ஆக மொத்தத்தில் இந்தக்கணக்குகளின் படி 20.45 % பங்கு சோனியா சகோதரிகளுக்கு கிடைத்திருக்கிறது..

360000000000 என்பதை சோனியாவின் பங்கில் கொடுத்திருந்தால்..

சோனியாவின் பங்கு - சோனியாவின் சகோதரிகளின் பங்கு

= 1056000000000 - 360000000000

= 696000000000

சோனியாவிடம் மீதமுள்ள பங்கு 696000000000

696000000000 என்பது 1760000000000 -யில் 39.54 % ஆகும்..

அதி முக்கிய குறிப்பு:

சோனியாவின் பங்கு 60 %

அதில் கணக்கின் படி 20.45 % அவரின் சகோதரிக்கு கொடுத்துவிட்டதாக வைத்துக்கொண்டால் 60 - 20.45 = 39.55 வருகிறதே ?

சோனியாவிடம் மிதமுள்ள பங்கு 39.54 என்று எழுதப்பட்டுள்ளதே ? என்ற கேள்வி யாருக்காவது வரலாம்..

அந்த 0.01 % ரவுண்ட்ப்பில் விடப்பட்டது..

ஆனால் 1760000000000-ல் 0.01% என்பது 176000000 ஆகும்..

கண்ணைக்கட்டுகிறது அல்லவா..,

ஆம் 100 கோடிக்கும் மேற்ப்பட்ட மக்களின் கண்னைக்கட்டி அடித்து விடலாம் என்று நினைப்பவர்களை என்னவென்று சொல்லவது..

War Criminal M.Karunanidhi

தமிழ் இனப்படுகொலைக் குற்றவாளி கருணாநிதி..

இறுதி யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் பலரும் சிங்கள ராணுவ காடையர்களால் கொல்லப்பட்டது அனைவரும் அறிந்ததே..

அந்த கால கட்டங்களில் கருணாநிதி நடத்திய நாடகங்கள் தான் ஈழத்தமிழர்களை மீளா துயருக்கு தள்ளியது என்றால் அது மிகையல்ல..

எம்.பிக்கள் ராஜினாமாவில் ஆரம்பித்து கண்டன கடிதம்..கண்டன அறிக்கை.. மனித சங்கிலி..அப்படி இப்படி என்று காலத்தைக் கடத்தி ஈழ மக்களை ராஜபக்சேவின் ராணுவம் வன்கொடுமை செய்து கொல்ல துணை நின்றார் என்பது பசுமரத்து ஆணி போல் அனைத்து தமிழர்களின் மனதில் பதிந்த ஒன்று..

கருணாநிதி ஸ்பெக்ட்ரம் பணத்தினை வாங்கி கொண்டு தமிழின படுகொலைகளை அனுமதித்தார் என்று தமிழ் உணர்வாளர்கள் சொல்வது 100% உண்மையாகும்..

இப்படி பலநிகழ்வுகளை அடுக்கி கொண்டே போகலாம்..

இதற்க்கெல்லாம் உச்சமாக நிகழ்ந்தது கருணாநிதி கட்சியில் உள்ள சில காடையர்கள் செய்த செயல்தான்..

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க தமிழ் சகோதரிகள் சிலர் அனுமதி கேட்டபோது அனுமதி தராமல் அலைக்கழித்தார் கருணாநிதி பலதடைகளையும் தாண்டி உண்ணாவிதம் இருந்தவர்களை தயாநிதி மாறனுக்காக மனுதாக்கல் செய்ய சென்ற சில காடையர்கள் கிண்டலும் கேலியும் செய்து அந்த சகோதரிகளை தாக்கவும் முற்பட்டனர்..

இது போன்ற கிழ்தர நிகழ்வுகளை பார்த்து ரசித்துக்கொண்டிருதவர்தான் இந்த கருணாநிதி..

ஈழப் பிரச்சணையில் மக்களை ஏமாற்ற மற்றும் ஒரு திட்டம் தீட்டினார் கருணாநிதி..
அது தான் 3 மணி நேர உண்ணாவிரத திட்டம்..
அந்த திட்டத்தின் படி உண்ணாவிரதத்தினையும் தொடங்கினார்..







மனைவி மக்கள் புடைசூழ டாக்டர்கள் துணையோடும் குடும்ப தொலைக்காட்சிகள் சகிதமும் கடற்காற்றோடு குளிர்சாதனபெட்டியும் காற்றினை வீச உல்லாச உண்ணாவிரதம் தொடங்கியது..

பல தரப்பு தமிழ் உணர்வளர்களும் அந்த காலகட்டத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டினால் கூட கைது செய்வது, சிறைக்கு அனுப்புவது என்று தன் உண்மை முகத்தினையும் காட்டிகொண்டுதான் இருந்தார் கருணாநிதி..

தமிழ் உணர்வாளர்களை அடக்க தேசிய பாதுகாப்பு சட்டத்தினையும் பயன்படுத்தினார்.. இதுவரை பயன்படுத்திக் கொண்டும் உள்ளார்..

உண்ணாவிரதம் இருக்கவும் பல தரப்புகள் அனுமதி கேட்டபோது கருணாநிதியால் அனுமதி மறுக்கப்பட்டது ஆனால் இந்த கருணாநிதி மட்டும் யாரிடம் அனுமதி வாங்கி உண்ணாவிரதம் இருந்தார் என்று தெரியவில்லை..

அன்று 3 மணி நேரத்தில் உண்ணாவிரத்தினை(!!??) முடித்துக்கொண்டு போர் நிறுத்தம் ஏற்ப்பட்டுவிட்டதாக கருணாநிதி பொய் பிரச்சாரம் செய்தார்..

இதை நம்பி மக்களும் தளபதி ரமேஷ், நடேசன், புலிதேவன் உள்ளிட்ட போராளிகளும் இலங்கை படையினரிடம் வெள்ளை கொடியுடன் சரணடைந்தனர்..

ஆனால் சரணடைந்தவர்களை சின்னபின்ன படுத்தி பல சித்திரவதைகளை செய்து சிங்கள ராணுவம் கொன்றது அனைவரும் அறிந்ததே..

அதற்கு ஆதாரமாக சேனல் 4 தொலைக்காட்சி பல விடியோக்களை வெளியிட்டுள்ளது..

அதில் ஒன்றுதான் சரணடைந்த தளபதி ரமேஷிடம் சிங்கள ராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாக பேசும் விடியோ..

மற்றொன்று பத்திரிக்கையாளர் இசை பிரியா அவர்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாத கொடுமைகள் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விடியோ..

படுகொலை செய்யப்பட்ட சகோதரி இசைபிரியா..


இவர்கள் படுகொலை செய்யப்பட கருணாநிதியும் ஒரு காரணம் தான்..

கருணாநிதியின் கரங்களில் இவர்களின் ரத்தம் இருக்கிறது என்றால் அது மிகையல்ல..

மற்றுமொன்று தமிழர்கள் பலர் சுட்டு கொல்லப்படும் விடியோவை பற்றி கருணாநிதி முன்பு கருத்து கூறுகையில் இது பழைய விடியோ போல் தெரிகிறதே என்று ராஜபக்சேவுக்கு ஆதரவாக பேசினார் என்பதையும் யாரும் மறந்து விடவில்லை..

அனைத்தையும் முடித்து விட்டு அவரது மகள் கனிமொழி உள்ளிட்ட திமுக கூட்டணி எம்பிக்களை இலங்ககைக்கு அனுப்பினார் அவர்களும் சென்று ராஜபக்சேவுக்கு சர்டிபிகேட் கொடுத்துவிட்டு அவரிடம் பரிசிலும் வாங்கி வந்தனர்..

ராஜபக்சே,சிங்கள அமைச்சர் ரோகிதா மற்றும் பலரிடமும் பரிசில் பெறும் கனிமொழி..







இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி டக்லஸ் உடன் தேடப்படாத குற்றவாளிகள்..


இனபடுகொலைகளை மறைக்க உதவுவதற்க்காக மேளதாளத்துடன் வரவேற்பு ..


இந்த அளவுக்கு(இன்னும் பல உள்ளன) ராஜபக்சேவுக்கு இனப்படுகளை செய்ய கருணாநிதி வழிவகை செய்து கொடுத்தார் என்றால்,இனப்படுகொலைகளை மறைக்க ராஜபக்சேவுக்கு உதவுகிறார் என்றால் நிச்சயமாக கருணாநிதி மேல் பல சந்தேகங்கள் வருவது நியாயம் தானே...

அதனால் கருணாநிதியும் போர் குற்றவாளிதான்..

கருணாநிதியை போர் குற்றத்திற்க்காக விசாரிக்க ஐ.நா மன்றத்திற்கு இது சம்பந்தமான தகவல்களை அனுப்புவோம்..

pavendar bharathidasan arignar Anna



அறிஞர் அண்ணா மற்றும் பாவேந்தர் பாரதிதாசன்

AIADMK Pasarai welcomes You(ths)



பல்வேறு கல்லுரிகளில் இருந்து வந்து தங்களை அதிமுகவில் இணத்துக்கொண்ட இளம் சிங்கங்கள்..

delhi thiruvilayadal 2G spectram scandal thuglak cartoon



பிரதமரை புலம்ப வைத்த ஸ்பெக்ட்ரம் ஊழல் துக்ளகில் வெளியான கருத்துப்படம்..

chinnavan periyavan mokkai

சின்னவன் : என்னண்ணே. எப்படி இருக்கீங்க? ஸ்பெக்ட்ரம் ஊழல் கதையெல்லாம் படிச்சிங்களா?நீங்க என்ன நினைக்கறீங்க?

பெரியவன்: ராஜாவா இருந்தாலும்..மந்திரியா இருந்தாலும் ராஜாவே மந்திரியா இருந்தாலும் தப்பு தப்புதானே?

சின்னவன் : பார்க்க சாதுவா இருந்துட்டு இவ்ளோ வேலை செஞ்சிருக்காரே

பெரியவன்: என்னதான் ஃபோட்டோவுல ஒரு பொண்ணு தேவதை மாதிரி தெரிஞ்சாலும் நெகட்டிவ்ல பிசாசு மாதிரிதான் தெரியும்.

சின்னவன் : எல்லா துறையிலும்தான் ஏலம் விடுறாங்க. அதுக்குன்னு இவ்ளோ காசா காணாம போகும்?

பெரியவன்: இளநீரிலும் தண்ணி இருக்கு. பூமியிலும் தண்ணி இருக்கு. இளநீர்ல போர் போட முடியுமா? இல்லை பூமியிலதான் ஸ்ட்ரா போட முடியுமா?

சின்னவன் : ஒரே ஒரு மந்திரி இவ்ளோ பணத்தை ஆட்டையை போட்டாரே. நம்ம ஊருல எவ்ளோ போலீஸ், வக்கீல் இருக்காங்க. இவருக்கு தண்டனை வாங்கி தந்துடுவாங்களா?

பெரியவன்: ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது

சின்னவன் : பி.எம்தானே பெரியாளு.அவருக்கு தெரியாமலா இவர் விளையாடி இருப்பாரு?

பெரியவன்: பஸ்ஸுல கலெக்டரே ஏறினாலும் முதல் சீட்டு டிரைவருக்குத்தான்
சின்னவன் : சரிதான். ஆனா இதுல காங்கிரஸூக்கு பங்கு கொடுக்காமலா விட்டிருப்பாங்க?

பெரியவன்: காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் போடுற முட்டை வெள்ளைதாம்ப்பா

சின்னவன் : அப்ப ஏண்ணே அவர பதவிய விட்டு தூக்கினாங்க?

பெரியவன்: முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருக்கிற காக்கா கருப்புதாம்ப்பா

சின்னவன்: ராசா வெளிவந்தா கூடவே திமுகவும் கூட்டணிய விட்டு வெளிவருமாண்ணே?

பெரியவன்: சைக்கிள் போனா கூடவே சைக்கிள் ஸ்டேண்டும் போகும். ஆனா பஸ் போனா பஸ் ஸ்டேண்ட் அங்கேயேதான் இருக்கும்

சின்னவன் : என்னதான் இருந்தாலும் எல்லோரும் சேர்ந்து அடிச்ச காசுக்கு இவர மட்டும் பலிகடா ஆக்குறாங்களே

பெரியவன்: கால் எவ்ளோ வேகமா ஓடினாலும் பரிசு என்னவோ கைக்குதாம்ப்பா

சின்னவன் : அதுவும் சரிதான். ஆனா இந்த களேபரத்துல கல்மாடிய மறந்துட்டாங்களே

பெரியவன்: டிரெயின் எவ்ளோ மெதுவா போனாலும் கடைசி பொட்டிதான் கடைசியா வரும்

சின்னவன் :இன்னொரு பொட்டி வந்து சேரும் வரை ராசாதான் மீடியாவுக்கு தோசா. கலைஞர் என்னண்ணே சொல்றாரு? ராசாவ காப்பாத்துவாரா?

பெரியவன்: வாத்யார் எவ்ளோதான் முட்டை போட்டாலும் அத வச்சு ஆம்லெட் போட முடியாது

சின்னவன் : சரிண்ணே.. மத்திய அரசுல திமுக பங்கேற்குது. அப்போ ஏன் மாநில அரசுல காங்கிரஸ் இல்லை?

பெரியவன்: ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது

சின்னவன் : ஓ.அப்போ திமுக போலீஸ்? அடுத்து.பாமகவும் இந்த ஊழல் நடந்தப்ப கூட்டணியில் இருந்துச்சே. அவங்களுக்கு ஏதாவது தேறியிருக்குமா?

பெரியவன்: பஸ் ஸ்டாப்புல நின்னா பஸ் வரும். ஃபுல் ஸ்டாப்புல நின்னா ஃபுல் இல்லை, ஹாஃப் கூட வராது.

சின்னவன்: தயாநிதி மாறன் இதுல எக்ஸ்பெர்ட் ஆச்சே. அவர் திரும்ப வந்தா சரி ஆயிடுமா?

பெரியவன்: எவ்ளோ பெரிய சாஃப்ட்வேர் புரஃபஷனலா இருந்தாலும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்ல காத்து வர வைக்க முடியாது

சின்னவன் : அதுவும் சரிதான். சாளரத்துலே மொக்கைதான் வருது. நானும் அங்க அடிக்கடி வறேன். ஆனால் மொக்கை எனக்கு வர மாட்டேங்குது.

பெரியவன்: என்னதான் காலேஜ் பஸ் தினமும் காலேஜ் போனாலும் அது டிகிரி வாங்க முடியாது

சின்னவன் : உங்களுக்கு மட்டும் எப்படிண்ணே இவ்ளோ மூளை?

பெரியவன் : நகம் வளர்ந்தா வெட்டலாம். முடி வளர்ந்தா வெட்டலாம். மூளை வளர்ந்தா?

சின்னவன் : ஆள விடுங்க. எஸ்கேப்ப்ப்ப்

Ram Jam

Rs 176000 crores 2G spectrum scandal

nenjukku neethi M.Karunanidhi and Kalaignar M. Karunanidhi

தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி


கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.

*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை.

இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.

பக்கம் 81,82 ல்..............
*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.

இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்................
* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.

பக்கம் 92,93 ல்..............................
* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.

இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.


இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
49 .additional properties after semmuzi coimbatore farm house
50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks)
extra extra extra extra

இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.

வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்!!!

Ram Jam